..................................................................................................
சௌதி அரேபியாவில் வேலை பார்த்துவரும் ஆசிய நாட்டுத் தொழிலாளர்களின் துயரம் பற்றிய உண்மைச் சித்திரம்.
....................................................................................................

சௌதி அரேபியா-மன்னராட்சியிலேயே இன்னும் நீடித்திருக்கும் மத்திய தரைக்கடல் நாடுகளில் ஒன்று. அதன் பெரும்பகுதி பாலைவனம். இந்தியா அளவுக்கு பரப்பளவைக் கொண்டிருந்தாலும், மக்கள் தொகையோ ஒப்பீட்டளவில் வெகு சோற்பம். எந்தவித வளங்களும் இல்லாதிருந்த இந்நாடு, எண்ணெ வளம் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு தலைகீழா மாற்றமடைந்தது.

அதுவரை ஆன்மீக முக்கியத்துவம் வாந்த நாடாக மட்டுமே அறியப்பட்ட சௌதி, எண்ணெ பாயத் தொடங்கியவுடன் உள்கட்டுமானம், வளர்ச்சிப் பணிகள் என்று பெருமளவில் வேலை வாப்புகளைக் கொண்ட நாடாக வளர்ந்தது. அந்த வகையில் எழுபதுகளின் பிற்பகுதியில் உடலுழைப்புக் கூலிகளா பெரும் எண்ணிக்கையிலான மக்கள் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை போன்ற நாடுகளிலிருந்து தருவிக்கப்பட்டனர்.


சௌதியின் மக்கள் தொகைக்கு ஈடாக வெளிநாட்டவர்கள் வேலை செய்தாலும், தொழிலாளர்களின் உரிமை என்று எதையும் எதிர்பார்க்க முடியாது. சோந்த நாட்டு மக்களுக்கே கூட ஜனநாயக உரிமைகள் என்று எதுவுமில்லை. அரசியல் கட்சிகளுக்கு அனுமதியில்லை. கூட்டம் கூடிப் பேசும் உரிமையையோ, எழுதி வெளியிடும் உரிமையையோ நினைத்துக்கூடப் பார்க்கமுடியாது. அச்சிடப்படும் நூல்கள் அனைத்தும் தணிக்கைக்குப் பிறகே வெளியிடப்படும். நாளிதழ்கள் தணிக்கை செய்யப்படுவதில்லை என்றாலும் அரசுக்கு எதிராக எதையும் எழுதிவிட முடியாது. மக்களும் அப்படியே பழக்கப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். அரசருக்கோ, அரசுக்கோ எதிராக எதையாவது பேசும் நிர்ப்பந்தம் ஏற்பட்டால்கூடச் சுற்றுமுற்றும் பார்த்துத் தாழ்ந்த குரலில் பேசுவதே மக்கள் வழக்கம்.


இந்நிலையில் வெளிநாட்டுக் கூலித்தொழிலாளர்கள் என்ன உரிமையை எதிர்பார்த்துவிட முடியும்?


குறைந்தபட்ச ஊதியம் என்று எந்த வரம்பும் இங்கு கிடையாது. நிறுவனத்திற்கு ஏற்றாற்போல், நாட்டிற்கேற்றாற்போல் ஊதிய ஒப்பந்தம் போடப்படும். ஒரே வேலை யைச் செய்யும் இருவேறு நிறுவனங்களின் தொழிலாளிகளுக்கு ஒரே விதமான ஊதியமும் வசதிகளும் இருக்குமென எண்ணிவிட முடியாது. ஒரே வேலையைச் செய்யும் ஒரே நிறுவனத்தின் தொழிலாளிகளுக்குக்கூட நாட்டைப் பொருத்து ஊதியம் வேறுபடும்.


ஒரு துப்புரவுத் தொழிலாளி எகிப்தைச் சேர்ந்தவராக இருந்தால் 1200 ரியால் வரை (ஒரு ரியால் என்பது இந்திய மதிப்பில் தோராயமாக 12 ரூபா) ஊதியம் கிடைக்கும். பிலிப்பைனியாக இருந்தால் 900 ரியால், இந்தியனுக்கு 800 ரியால், பாகிஸ்தானி, இந்தோனேசியனுக்கு 600 ரியால், இலங்கை என்றால் 500 ரியால், பங்காளி (வங்கதேசம்) என்றால் 400 ரியால், தற்போது நேபாளத்திலிருந்து 300, 250 ரியாலுக்குகூட ஆட்கள் வருகிறார்கள். இது அந்தந்த நிறுவனங்களைப் பொறுத்து சற்றுக் கூடக்குறைய இருக்கும்.


ஊரில் மிச்சமிருக்கும் கொஞ்ச உடமைகளையும் விற்று, கடன் வாங்கி, தாலியை அடகுவைத்து பெரிய தொகையைத் தரகனிடம் தந்துவிட்டு, அதைவிடப் பெரிய கனவுடன் வந்திறங்கியதும் முள்ளாக் குத்துவது இந்த ஊதிய வேறுபாடுதான்.

ஊரில் தரப்படும் ஒப்பந்தத்திற்கும் (பெரும்பாலும் தருவதில்லை, வற்புறுத்திக் கேட்டால் காண்பிப்பார்கள்) சௌதியில் வந்திறங்கியதும் போடப்படும் ஒப்பந்தத்திற்கும் ஒரு தொடர்பும் இருக்காது. மொத்த ஊதியத்தில் 60 விழுக்காடுதான் அடிப்படை ஊதியமாக இருக்கும். எந்நேரம் அழைத்தாலும் வேலைக்குச் செல்லத் தயாராக இருக்கவேண்டும். எந்த ஊரில் என்றாலும் மறுப்புத் தெரிவிக்க முடியாது. வேறு வெளியாளிடமோ, வெளி நிறுவனங்களிலோ வேலை செய்யக் கூடாது போன்றவை பொதுவான விதிகள். ஊதிய உயர்வை சட்டபூர்வமாகக் கோரமுடியாது. விண்ணப்பிக்கலாம் அவ்வளவுதான். உபரி வேலை செய்தால் அடிப்படை ஊதியத்திலிருந்து நேரக் கணக்குப்படி கூலி தருவார்கள். வேலை நாளாக இருந்தால் ஒன்றரை மடங்கு என்றும் விடுமுறை நாளாக இருந்தால் இரண்டு மடங்கு என்றும் சட்டத்தில் உண்டு. ஆனால் வெகு சில நிறுவனங்களைத் தவிர, ஏனையவை இதைக் கண்டு கொள்வதில்லை.


சௌதியில் பரிதாபத்தை வரவழைக்கும் நிலையில் இருப்பவர்களில் முதன்மையானவர்கள் கட்டுமானத் தொழிலாளர்கள்தான். 12 மணி நேர வேலை கட்டாயம். ஏனைய தொழிலாளர்களோடு ஒப்பிட்டால் குறைந்த ஊதியம். இங்கு அடிக்கும் வெயிலில் பத்து நிமிடம் நின்றாலே தோலில் சூடு தாங்காமல் ஒருவித அரிப்பு வந்துவிடும். அந்த வெயிலில் காலை முதல் மாலை வரை நின்று வேலை செய்ய வேண்டும். நகரத்தில் எங்காவது ஒதுக்குப்புறத்தில் தங்குமிடம் இருப்பதால், போவருவதற்கு இரண்டு மணி நேரம் பிடிக்கும். இந்தக் களைப்புகளோடு அறைக்கு வந்தால் ஒரு அறையில் ஆறு பேர் முதல் பத்துப் பேர் வரை அடைக்கப்பட்டிருப்பர்.


தொழிற்சங்கம் போன்றவற்றை இங்கு ஏற்படுத்த முடியாது என்பது ஒருபுறமிருந்தாலும், பாதிக்கப்படும் ஒரு தொழிலாளிக்காக இங்கு யாரும் பரிந்து பேசவும் முடியாது. வேறு எந்த வளைகுடா நாட்டிலும் இல்லாத பிரச்சனை இது.
வளைகுடா பிராந்தியத்திலுள்ள துபாயில் தொழிலாளர்கள் போராடி மதியம் 11 மணியிலிருந்து 3 மணிவரை கட்டுமானப் பணிகள் நடைபெறக்கூடாது என்று ஆணை பெற்றிருக்கிறார்கள். மஸ்கட்டில் பாதுகாப்புச் சாதனங்கள் என்ற பெயரில் தரமற்ற எடை கூடிய உபகரணங்களைத் தொழிலாளர்களிடம் திணிக்காமல் தரமான, எடைகுறைந்த பாதுகாப்பு சாதனங்களை வழங்க வேண்டும் என்று உத்தரவைப் பெற்றிருக்கிறார்கள். இவை சாதாரணமான சிறிய சலுகைகள்தான் என்றாலும், இவற்றை வெளிநாட்டுத் தொழிலாளர்கள் போராடிப் பெற்றிருக்கிறார்கள் என்பது முக்கியமானது. ஆனால், சௌதியைப் பொருத்தவரை இதைப் போன்ற எதையும் எதிர்பார்க்க முடியாது.


தொழிலாளர் நீதிமன்றங்கள் தொழிலாளிக்கும் நிறுவனங்களுக்கும் இடையில் எழும் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்காக ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. அவை கடைகளிலோ அல்லது தனிப்பட்ட சௌதிகளிடமோ வேலை செய்பவர்களுக்குத்தான் தீர்வு சோல்லும் அளவுக்கு அதிகாரம் பெற்றிருக்கின்றன. பெரிய நிறுவனங்கள், பன்னாட்டு நிறுவனங்கள் குறித்த புகார்களை எடுத்துக் கொள்வதில்லை. தொழிலாளிகளிடமே நிர்வாகத்திற்குப் பணிந்து செல்லுமாறு அறிவுரை கூறுகின்றன.


அண்மையில் ஹைதராபாத்தைச் சேர்ந்த ஒரு தொழிலாளி, மருத்துவ விடுப்பில் இருந்த 15 நாளுக்கு ஊதியம் வழங்கப்படவேண்டும் என்று அஃப்ராஸ் எனும் நிறுவனத்திற்கு எதிராக (மருத்துவ விடுப்பிற்கு ஊதியம் வழங்கவேண்டும் என விதி உண்டு) அளித்த புகாரை தொழிலாளர் நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட, அதையும் புகாராகச் சேர்த்து அமீர் நீதிமன்றத்தில் (தொழிலாளர் நீதிமன்றத்திற்கு மேல் நீதிமன்றம்) அளிக்க அங்கும் ஏற்கப்படவில்லை. ஆனால், அதே நாளின் இரவில் யாருக்கும் தெரியாமல், அவரது சோந்த உடமைகளைக்கூட எடுத்துக்கொள்ள அனுமதிக்காமல், கொடுக்க வேண்டிய ஊதியமோ, எட்டு ஆண்டுகள் வேலை செய்ததற்கான பலன்களோ எதுவுமின்றி ஊருக்குத் துரத்தப்பட்டார்.


தூதரக அலுவலகங்களும், பெயருக்குத்தான் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. இந்தியத் தூதரக அலுவலகங்களில் தொழிலாளர்களை அலட்சியமும் அவமதிப்பும்தான் வரவேற்கும். கடவுச்சீட்டு புதுப்பிப்பதைத் தவிர, வேறெதற்கும் அங்கு செல்வதில் ஒரு பயனும் இல்லை. இந்தியத் தூதரகம் மட்டுமல்ல; இங்கு எந்தவொரு ஆசிய நாட்டுத் தூதரகமும் இப்படித்தான் நடந்து கொள்கின்றன.


"ஓவர் டைம்" என அழைக்கப்படும் உபரி வேலை என்பது சௌதியைப் பொருத்தவரை ஒவ்வொரு தொழிலாளிக்கும் மிகவும் முக்கியமானது. ஊரில் வாங்கிய கடன், அதற்கான வட்டி, குடும்பச் செலவுகள், குழந்தைகளின் கல்வி, மருத்துவம் என அனைத்தையும் சமாளிக்க சம்பளம் மட்டும் போதுமானதாக இருக்காது. அவர்களின் தேவைக்கு எல்லாம் உபரி வேலைதான் ஒரே வழி. ஆனால், உபரி வேலைக்குச் சட்டப்படியான ஊதியத்தை தராமல் ஏமாற்றுகிறார்கள். அடிமையைப் போல் நடத்துகிறார்கள்.


ஓய்வு வேண்டும் என உடல் கெஞ்சினாலும் தொழிலாளர்கள் உபரி வேலைக்குச் செல்ல ஆயத்தமா இருப்பார்கள். தொழிலாளர்கள் தங்கியுள்ள அறையில் இருந்து ஆசைகளின் அசையில் கனன்று கொண்டிருப்பதைவிட, வேலைக்குச் சென்று அந்த வியர்வையை தெளித்து வெம்மையை ஆற்றுப்படுத்துவோம் என நினைப்பதும் ஒரு காரணம்.


ஒப்பந்த நிறுவனங்கள் என்று சில இருக்கின்றன. பெரிய நிறுவனங்களிடம் ஒப்பந்த அடிப்படையில் வேலைகளைப் பெற்றுத் தங்களது தொழிலாளர்களை வைத்து செய்து முடிப்பது இந்த ஒப்பந்த நிறுவனங்களின் பணி. இந்த நிறுவனங்கள் தங்கள் தொழிலாளர்களுக்குத் தவிர்க்க முடியாத தருணங்களைத் தவிர உபரி வேலை கொடுப்பதில்லை. அதற்குப் பதிலாக இவர்கள் "டபுள் டூட்டி" எனும் ஆயுதத்தை கையில் வைத்திருக்கிறார்கள்.


அதாவது, ஒரு இடத்தில் வேலை செய்யும் ஒரு தொழிலாளியை எட்டு மணி நேரம் முடிந்ததும் வேறொரு இடத்தில் கொண்டு விட்டுவிடுவார்கள், அங்கு இன்னொரு எட்டு மணி நேரம் வேலை பார்க்க வேண்டும். சில நாட்களில் சில மணி நேரம் உபரி வேலை என்பதைவிட, மாதத்தில் எல்லா நாளும் வேலை, இரட்டைச் சம்பளம் என்று கூறிச் சம்மதிக்க வைக்கிறார்கள். ஆனால், முதல் வேலைக்கு மட்டுமே ஒப்பந்தப்படி முழுச் சம்பளம். இரண்டாவது வேலைக்கு பாதிச் சம்பளம் மட்டுமே தரப்படும்.


இது போன்ற உபரி வேலை கிடைக்காதவர்கள் அல்லது விருப்பமில்லாதவர்களில் எட்டு மணி நேர வேலை போதும், வேறு வேலை வேண்டாம் எனக் கருதுபவர்கள் வெகு சிலரே. ஏனையவர்கள் செய்யாத வேலை இல்லை எனும் அளவுக்கு எல்லா வேலைகளையும் செய்கின்றனர். இங்கு ஒரு லிட்டர் பெட்ரோல் 50 ஹலாலா தான் (அரை ரியால்). ஆனால், ஒரு லிட்டர் தண்ணீர் இரண்டு ரியால். இதனால் மொத்தமாக தண்ணீர் பாட்டில்களை வாங்கி வைத்துக் கொண்டு சாலைகளில், சந்திப்புகளில், கடைவீதிகளில் இன்னும் செல்ல முடிந்த அத்தனை இடங்களுக்கும் சென்று வண்டிகளில் செல்வோர், நடந்து செல்வோர் என அத்தனை பேரிடமும் தண்ணீர் புட்டிகளை நீட்டி, வாங்கிவிட மாட்டார்களா எனும் ஏக்கத்துடன் விற்றுக் கொண்டிருப்போர் ஏராளம்.


வியர்த்து வழியும் முகம், ஒரு கையில் பை, மறு கையில் போதிய நீளமுள்ள முனையில் வளைந்த ஒரு கம்பி இந்த அடையாளங்களுடன் சாலையில் அநேகரைச் சந்திக்கலாம். குப்பைத் தொட்டிகளைக்கூட விட்டு வைக்காமல் கிளறி பெப்ஸி டப்பாக்களைத் தேடிச் சேகரித்து விற்கும் இவர்களும் ஏதோ ஒரு நிறுவனத்தில் எட்டு மணி நேர வேலையை முடித்து விட்டு உபரி வேலையா அலைபவர்கள் தாம்.


இன்னும், துணி துவைத்துக் கொடுப்பவர்கள், முடி திருத்துவோர், தொலைபேசி அட்டை விற்பவர்கள், ஓட்டுநர்கள், கணிணி வேலை செய்பவர்கள், சமையல் வேலை செய்பவர்கள், கடைகளில் வேலை செய்வோர் என்று என்னென்ன வழிகளில் முடியுமோ அதிலெல்லாம் முனைந்து, முயன்று தங்களின் எட்டு மணி நேர வேலைக்குப் பிறகு கரணம் அடித்துக்கொண்டிருக்கும் எவரையும் சந்தித்து, நாளின் பெரும்பாலான நேரத்தில் உழைத்தே தேந்து கொண்டிருக்கிறீர்களே, உங்களைச் சுற்றிநிகழ்பவை குறித்துத் தெரிந்து கொள்ள வேண்டாமா என்றால், ஒரு அசட்டுச் சிரிப்போடு "ஊரில் என்னை நம்பி ஒரு குடும்பம் இருக்கிறதே" என்பதுதான் பதிலாக இருக்கும்.


முன்பொருமுறை அந்நாட்டில் தோன்றிய கம்யூனிஸ்ட் கட்சியை வெகு சுலபமாக நசுக்கிவிட்டது சௌதி அரசு. இனியொருமுறை கம்யூனிச இயக்கம் சௌதி மண்ணில் தன்னைப் புதுப்பிக்கும் போது, அதை ஒடுக்குவது அரசுக்கு அவ்வளவு சுலபமாக இருக்கப் போவதில்லை. இன்று வளைகுடா வெயிலில் சர்வாதிகார ஷேக்குகளிடம் வதைபடும் தொழிலாளிகள், தேசிய இன வேறுபாடு, மத வேறுபாடு இன்றி வர்க்கமா ஒன்றிணைந்து ஏகாதிபத்தியக் கொழுப்பில் ஆட்டம் போடும் ஷேக்குகளை வஞ்சம் தீர்ப்பார்கள். தொழிலாளிகளின் வர்க்க ஒன்றிணைப்பில் வளைகுடாவின் விதி மாற்றி எழுதப்படும். அந்த நாளுக்காக நாங்கள் காத்திருப்போம், வேலை செய்வோம்.


- வினவு நிருபர், வளைகுடாவிலிருந்து.
(வினவு இணையதளத்தில் வெளிவந்த
கட்டுரையின் சுருக்கம்)