நட்புடன், ஜெயபாலனுக்கு (தேசம் நெற்). தங்களின் கட்டுரையைப் படித்தேன். கூடவே 'தமிழரங்கத்தின்' மறுப்பையும் படித்தேன்.

ஜெயபாலனின் கருத்துப்படி:-

 

''இரயாகரன் தவறான தகவல்களின் அடிப்படையில் கட்டுரைகளை எழுதுவது ஒன்றும் புதிய விடயமல்ல. இது இரயாகரனுக்கு மட்டுமுள்ள குறைபாடும் அல்ல. இது கீ போட் மாஸ்க்ஸிஸ்டுக்களுக்குள்ள பொதுவான குறைபாடு. இவர்கள் தகவல்களைச் சேகரிப்பது உறுதிப்படுத்துவதில் கவனம் செலுத்துவதில்லை. தங்கள் உழைப்பைச் செலுத்துவதும் இல்லை. ஏனெனில் இவர்கள் சொகுசு மார்க்ஸிட்டுக்கள். இவர்கள் பிரதான நீரோட்டத்தில் இருந்து அந்நியப்பட்டு இருப்பதனால் இவர்களுக்கு தெரிவு செய்யப்பட்ட மூலங்களில் இருந்து மட்டுமே தகவல்களைப் பெற முடிகின்றது. தங்கள் அரசியலுக்கு வலுச் சேர்க்கும் தகவல்கள் எதனையும் எவ்வித விசாரணையும் இல்லாமல் இவர்கள் பயன்படுத்துவார்கள்.-''

இதிலிருந்து ஜெயபாலன் எதைச் சொல்ல வருகிறார்?

 

இதற்கான விடையை வாசகரிடமே விட்டுவிடுகிறேன்.

 

தங்கள் அரசியலை ஏற்றுக்கொள்ளாதவர்களை ஜோர்ஜ் புஸ், வே பிரபாகரன், மகிந்த ராஜபக்ச மட்டுமல்ல இரயாகரனும் மிரட்டுகின்றார். டிசம்பர் 6ல் ரமிள்சேர்க்கிளில் இருந்து யோகன் கண்ணமுத்துவுக்கு (அசோக்) அனுப்பப்பட்ட மின் அஞ்சல்:


From: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
To: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Subject: tamilcircle
Date: Sun, 6 Dec 2009 18:31:17 +0000


”அசோக் நீ இப்போது கூட்டு வைத்திருக்கும் ஜான் மாஸ்டர் தான் கட்டன் நாசனல் வங்கிப்பணத்தை திருடிக்கொண்டு கனடாவிற்கு ஓடியவன். இதையும் நாம் அம்பலப்படுத்துவோம்.”

(இது ஜெயபாலனின் இன்றைய உலக ஒழுங்கமைப்புக்குள் இருக்கும் 'ஜேணலிசத்'தின் ஆதாரங்கள்.)

 

அடுத்து,

 

'வியூகம்' தொடர்பாக:

 

ஜெயபாலனால் முன்வைக்கப்படும் ஆதாரத்தின் வடிவங்கள் -

 வியூகம் சஞ்சிகையின் இலத்திரனியல் வடிவம் இரயாகரனுக்கு டிசம்பர் 14 மாலை 8:48க்கு கிடைக்கப்பெற்றுள்ளது.

 On Mon, 14/12/09, Tamil Circle <இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.> wrote:

> From: Tamil Circle <இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.>
> Subject:
> To:
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
> Date: Monday, 14 December, 2009, 8:48 PM


, கடுமையாக
, விமர்சிக்கப்பட வேண்டிய நிலையில் - பார்வைக்கு
,
, தமிழரங்கம்
, இணையத்தளம் கருத்து
, மக்களைப் பற்றிக்
, கொண்டால் அது மாபெரும்
, சக்தியாக
, உருவெடுக்கும்
,
, www.tamilcircle.net
,
, வர்க்கம், அரசியல்,
, சாதியம், பெண்ணியம்,
, தேசியம், நிறம், மதம்,
, பண்பாடு, கலாச்சாரம்,
, இசை, சுற்றுச்சூழல் …
, என அனைத்து
, விடையங்களையும்
, இத்தளத்தில் நீங்கள்
,
, காணமுடியும்.
,
, மின்னஞ்சல் இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
>
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

(ஒரு மின்னஞ்சலை ஆதாரப்படுத்தும், இவ் வடிவத்துக்கு மேல் எவ்வாதாரத்தையும் 'தேசம் நெற்' முன் வைக்கவில்லை.)

ஒர் 'ஈமெயிலை' ஓர் ஊடகத்துக்கு ஒருவர் ஆதாரப்படுத்தினால்:

 

161209_1.jpg

 

இவ்வாறு அதன் '----- Original Message -----  ' வடிவத்தை  உறுதிப்படுத்த வேண்டும். ( இங்கு பெறுபவரின் விபரம் என்னால் மறைக்கப்பட்டுள்ளது) இத்தகவல் வந்ததற்கான 'வழிப்பாதை' யான.. பின்வருவனவற்றை,

 161209_2.jpg

ஆவது ஆதாரப்படுத் வேண்டும். (இங்கும் பெறுபவரின் விபரம் என்னால் மறைக்கப்பட்டுள்ளது) இதன் தொடர்ச்சியும் தேவையற்றது என்பதால் என்னால் மறைக்கப்பட்டுள்ளது!  - இவைகள் ஒரு குறைந்த நகலகள் மட்டுமே அன்றி ஜெயபாலன் குறிப்பிடுவது போல,

 

''நாம் தகவல் யுகத்தில் வாழ்ந்து கொண்டுள்ளோம். 20ம் நூற்றாண்டில் மிக வேகமாக வளர்ச்சி அடைந்த துறை தகவல் தொழில்நுட்பம். இந்த 21ம் நூற்றாண்டில் தகவல் தொழில்நுட்பத்துறையின் வளர்ச்சியின் பலாபலன்களை நாங்கள் அனுபவித்துக் கொண்டு  உள்ளோம். மித மிஞ்சிய தகவல்களால் ஏற்படுகின்ற பாதிப்புக்கள் பற்றி உலகம் இன்று விவாதிக்கின்றது. ஆனால் தமிழ் சமூகம் இந்தத் தகவல் தொழில்நுட்பத்துறை வளர்ச்சியின் அடிப்படைகளைக் கூட அனுபவிக்க முடியாத யுத்த சூழல் இலங்கையில் இருந்தது. ஆறு மாதங்களுக்கு முன் வரை தமிழீழ விடுதலைப் புலிகளும் இன்றும் இலங்கை அரசும் தகவல்கள் மீதான தங்கள் அதீத கட்டுப்பாடுகளை கொண்டிருந்தனர். கொண்டிருக்கின்றனர். ஆனால் மேற்கு நாடுகளில் இருந்த தமிழ் ஊடகங்களைப் பொறுத்தவரை தகவல்கள் மீதான குறிப்பிடத்தக்க கட்டுப்பாடுகள் இருக்கவில்லை. அவர்களுக்கு தகவல்கள் பலவழிகளிலும் கிடைத்தது. தகவல்களைப் பெறுவதற்கான பலவழிகளும் இருந்தது. ஆனால் மேற்கு நாடுகளில் இருந்த தமிழ் ஊடகங்கள் உண்மைகளைத் தவறவிட்டன. தம் விருப்பு வெறுப்புகளுக்கும் தங்கள் அரசியல் தேவைகளுக்கும் ஏற்ப தகவல்களை வடிகட்டிக் கொடுத்தனர். மக்களை மாயைக்குள் வைத்திருந்தனர்.''

 

ஜெயபாலனின் இக் கருத்துக்களில் ஒரு பாதியை மட்டுமே ஏற்க முடியும், அதுகும் அவரது 'ஜேணலிசத்தில்' இருந்து!

 

இன்று அண்டவெளியில் 17 ஆயிரம் 'மனித குழுமங்களின்' விண்கலங்கள் வலம் வருகின்றன.

 

இதில் சாதாரணமான தொலை தொடர்பு விண்கலத்தின் பயணம் 790 கிலோ மீற்றராகும். சராசரி 800 கி.மீ பயணத்தைக் கொண்ட ரசிய விண்கலமான, KOSMOS -2251  (இது 1993ல் விண்ணில் ஏவப்பட்டது! ) உம், 689 கிலோ மீற்றர் பயணத்தைக் கொண்ட அமெரிக்க விண்கலமான, IRIDIUM 33  (இது 1997ல் விண்ணில் ஏவப்பட்டது! ) உம் கடந்த பெப்.10 நாள் குறுக்கும் நெடுக்குமான பூகோளப் பாதையில் - Sibir- ல் மோதியதும் உலகறிந்த உண்மையாகும்.


இதற்கு மேலே,


800, தொடக்கம் 1000 கிலோமீற்றரில்: வானிலை மற்தும் சமூகம் அது சார்ந்த கண்காணிப்பு விண்கலம் வலம் வருகிறது. இதற்கு மேலே 20,000 கிலோ மீற்றரில் 'நவிகசூன்' விண்கலமும், இதற்கு மேலே 36,000 கிலோ மீற்றரில்  தொலைத் தொடர்பு ' கொமினிக்கசூன்' மற்றும் இராணுவ இணைய, உளவு விண்கலமும் பவனிவருகிறது!


இதற்குள்தான் ஜெயபாலன் குறிப்பிடும் 'தகவல் யுக' மும் வாழ்கிறது என்பதை இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.

ஜெயபாலன் மேற் குறிப்பிட்ட தகவல்களை இங்கே வைப்பது, கீழே தான் ஆதாரப்படுத்தும் 'ஈமெயில்' ஜேனலிசத்தை இலகுவாக ஆதாரப்படுதவே.

 

மற்றப்படி,

 

''நடந்து முடிந்த வன்னி யுத்தத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் பலவீனமான நிலையில் இருந்தனர்''

 

என்பது, அவர்கள் இதற்கு முதல் பலமான இராணுவ அரசியல் நிலையைக் கொண்டிருந்தனர் !-அதாவது கருணா பிரிவதற்கு முதல் கூட - அவ்வாறான பலம் இருந்ததாகக் காட்டும் மாயையே! கருணா பிரியாமல் இருந்தால் கூட கிழக்கும், வன்னியையும் கைப்பற்றும் யுத்தம் சாத்தியமானதே!!

 

இது இலங்கையினது மட்டுமல்ல: உலகத்தின், உலக உணவுத்திட்டத்தின் தேவையும் கூட....

 

நட்புடன்..

சுதேகு
171209