கோணேஸ்வரி ஈழத்தில் தமிழ் பெண்ணாய் இருந்ததால் சிங்கள இனவெறி இராணுவத்தால் குதறப்பட்ட ஒரு தாய். இதே அரச இயந்திரத்தின் இராணுவம் மன்னெம்பரியை நிர்வாணமாக்கி தெருத்தெருவாக ஊர்வலம் கொண்டு சென்று பல வெறியர்களால் பாலியல் வதைக்குட்படுத்தி கொலை செய்த சரித்திரம் 1971 ஏப்ரல் கிளர்ச்சியின் உச்சமான அக்கிரமம். சிங்கள இராணுவம் தனது சொந்த இனத்தைச் சேர்ந்த கதிர்காம பேரழகி எனப்பட்ட ஒரு பெண் போராளி ”மன்னம்பெரிக்கு ” வழங்கிய அக்கிரமமான கொடிய தண்டனை இதுவாகும்.

 

An eye witness recounts the Kataragama Beauty Queen Murder

அமெரிக்க ஆக்கிரமிப்பு இராணுவம் ஈராக் பெண்களை குதறியெறிவது எவ்வாறு என்பதை நீங்கள் கீழே நிதரிசனமாகக் கண்டு கொள்ளலாம்.

















காஷ்மீர் பெண்களின் கதியை இத்தொடுப்பில் காணுங்கள்

 

தேசப் பாதுகாப்பின் பெயரால் காமவெறி பயங்கரவாதம்

 

இந்திய ஆக்கிரமிப்பு இராணுவம் ஈழத்தில் பெண்கள் மேல் கட்டவிழ்த்து விட்ட கொடுமைகள் மனித உரிமைக்கான பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினால் ஆவணப்படுத்தப்பட்டிருக்கின்றன.

 

இன்னும் மேலே போனால் தழிழர் ”விடுதலை" இயக்கங்களுக்குள் புதையுண்டு போன பாலியல் வன்கொடுமைகளும் கொலைகளும் இருண்ட சம்பவங்களாகவே இன்னும் இருக்கின்றன. புதைகுழிகள் பேசுவது எப்போது?

 

மொத்தத்தில் அதிகார வர்க்க ஆக்கிரமிப்பு அடக்குமுறை இராணுவ வெறிநாய்கள் எப்போதுமே இழிவாய் பெண்கள் மேல் பாய்ந்து குதறுவது இனம் மொழி நாடு வயது நிற பேதம் எதுவும் கடந்த ஒரு அக்கிரமம்.

 

எல்லாக் கோணேஸ்வரிகளுக்குமாய் இரத்தம் கொதிக்கட்டும்.

 

இந்த வதை கொடுமைகளோ இனம் மொழி நாடு வயது நிறம் எல்லாம் தாண்டி நியாயம் கேட்கின்றது.


சிறி

12.03.2008