'கிழக்கில் மாற்று தமிழ் ஜனநாயக இயக்கங்கள் இணைந்து" ள்ளது என்ற செய்தி, பல உறுதி செய்யப்படாத சந்தேகங்களை எல்லாம் தெளிவுபடுத்தி விடுகின்றது. கிழக்கில் பிரபாகரனுக்கு ஈடாக ஏகப்பிரதிநிதியாக மாறும் கருணா கும்பல் நடத்தும் பாசிசக் கொலை வெறியாட்டம் தான், கிழக்கில் மட்டும் அந்த இணைவு என்ற அரசியலை அரங்கேற்றுகின்றது. அன்று ஈரோஸ்

பாலகுமாரை புலிகள் இணைத்தபோது, இதே போன்ற ஒரு அறிக்கை வெளியாகியது. இதுவும் அதே போன்ற ஒரு அறிக்கை தான். மற்றைய தரப்பு பேரினவாத குண்டியை கழுவியபடி மௌனம் சாதிக்கின்றது.

 

மற்றைய பிரதேசங்களில் ஏன் இந்த கூட்டு அமையவில்லை என்பது மிகத் தெளிவானது. கருணா கும்பலின் பாசிசத்துக்கு தலைமைகள் உட்பட மறுத்துவிட்டது. கிழக்கில் பேரினவாத புலனாய்வுப் பிரிவின் முன்முனைப்புடன் இந்த இணைவுப் பாசிசம் அரங்கேறியுள்ளது. அன்று புலிகள் பிரேமதாசவின் துணையுடன் கொழும்பில் இருந்து கடத்திச் செல்லப்பட்ட நூற்றுக்கணக்கான மாற்று இயக்கத்தினருக்கு என்ன கதி நிகழ்ந்ததோ, அது இன்று மட்டக்களப்பில் கருணா தலைமையில் அரங்கேறுகின்றது.

 

இன்று மட்டக்களப்பில் தொடர்ந்து இயங்கும் மற்றைய துரோகக் குழுக்கள், வடக்கு கிழக்கு இணைவு பற்றி பேசுவதால், அதைத் தடுத்து நிறுத்தவேண்டிய தேவை கிழக்கு மேலாதிக்கத்தைக் கோரும் கருணா கும்பலுக்கும், சிங்கள பேரினவாதத்துக்கும் தேவையாகின்றது. இந்தக் குழுக்களின் கிழக்கு பிரிவைத் தனிமைப்படுத்தி அழிக்க விரும்பும் கூத்துதான், இந்த இணைவு என்ற ஒரு தலைப்பட்சமான கருணா தரப்பு அறிக்கைகள்.

 

இந்த வகையில் கிழக்கில் இயங்கும் குழுக்களினது, வடக்குடனான அதன் தொடர்புகளை சிதைக்க முனையும் சதி தான், கருணா - புலனாய்வுக் கும்பல் நடத்திய இணைப்பு நாடகம்.

 

இந்த இணைவுக்காக கொலை அச்சுறுத்தலை விடுத்தே, கிட்டத்தட்ட பலாத்காரமாக அவர்களை கடத்திச் சென்றும், அவர்கள் விரும்பியதை விரும்பியவாறு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் தான், அண்மையில் புளொட் அமைப்பின் மத்தியகுழு உறுப்பினரும், கிழக்குப் பிராந்திய பொறுப்பாளருமான கணபதிப்பிள்ளை பாக்கியராஜா (ராஜ்மாமா), கொலைக்கும் உள்ள தொடர்பு அம்பலமாகின்றது. இந்தக் கொலையை புலிகள் செய்யவில்லை என்பது எல்லோரும் ஏற்றுக்கொண்ட ஒன்று.

 

இதை புலனாய்வுப் பிரிவு செய்ததாக கூறிக்கொள்ளவே எல்லோரும் விரும்புகின்றனர். ஆனால் இதைக் கருணா குழுவும் புலனாய்வுப் பிரிவும் சேர்ந்து செய்துள்ளது. இதை இந்த இணைவு நாடகம் மேலும் துல்லியமாக நிறுவுகின்றது. உண்மையில் கருணா கும்பலும், சிங்கள பேரினவாத புலனாய்வுக் கும்பலும், வேறு வேறாக இயங்கவில்லை என்பதும், ஓரே குறிக்கோளுடன் ஒன்றையொன்று அரவணைத்தபடி இயங்குவதும் அனைவருக்கும் தெளிவானதே.

 

இந்த வகையில் இந்தக் கொலை கருணா குழுவின் இன்றைய தேவையுடன் தொடர்புடையதாக எப்படி இருக்கின்றதோ, அதேயொத்த வகையில் புலனாய்வு பிரிவினது தேவையும் கூட. இந்தக் கொலை கருணா குழுவினதும், புலனாய்வு பிரிவினரது தேவையுடனும் அவர்களால் அரங்கேற்றப்பட்டது. அது இணைப்பு வடிவில் வெளி வந்துள்ளது. தமிழ் இனம் என்ற வகையில், வடக்குடன் கிழக்கு என்று பொதுமைப்படுத்தும் அனைத்து சமூகக் கூறுகளையும, அழித்தொழிக்கும் வகையில் இவை அனைத்தும் அரங்கேறுகின்றது. கிழக்கில் நடப்பது கருணா தலைமையிலான ஒரு பாசிச சதிவெறியாட்டம் தான்.

 

குறிப்பு: எல்லாவற்றையும் யாழ்ப்பாணியமாக காட்டி, கிழக்கு மக்களுக்கும் பேரினவாதத்துக்கும் எந்த பிரச்சனையும் இல்லை என்ற கிழக்கு மேலாதிக்கத்தை அம்பலப்படுத்தி, கிழக்கு மக்கள் எப்படி பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்றனர் என்ற புள்ளிவிபரத் தரவுகள் கொண்ட கட்டுரை இரண்டொரு நாளில் வெளிவர உள்ளது.

பி.இரயாகரன்
29.01.2007