உண்மை – குஜராத் 2002 எவர்கள் இதனைச் செய்தார்களோ அவர்களின் வார்த்தைகளிலிருந்து....

- ஆசிஸ் கேத்தன்.

 


கூட்டுச் சதியாளர்கள் மற்றும் கலவரக்காரர்கள்

அஹமதாபாத், வதோதரா மற்றும் சபர்கந்தாவில் இனஅழிப்புச் செய்திடத் திட்டமிட்டோர் இன்னும் செயல்படுத்தியவர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்கள். முஸ்லிம்கள் வசிக்கும் பகுதிகளில் விஹெச்பி-பஜரங்தள்காரர்களால் கலவரங்கள் மிகத் துல்லியமாகத் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டது.

மேலோட்டம்:

சபர்மதி விரைவுத் தொடர் வண்டியின் S-6 பகுதி தீக்கிரையாக்கப்பட்டத் தினம் கோத்ராவிற்கு நரேந்திர மோடி வருகைத் தந்தார். முஸ்லிம்களை நெருக்கடிக்கு உள்ளாக்கப்பட வேண்டிய நேரம் வந்துவிட்டது என்ற முதல் சைகையை, சங்க்பரிவாரங்களுக்கு அவருடைய குமுறல் சுட்டிக்காட்டியது.

அன்றிரவே, பிஜேபி மற்றும் சங்க்பரிவார மேல்மட்டத் தலைவர்கள் அஹமதாபாத், வதோதரா மற்றும் கோத்ராவில் சந்தித்து, மாநிலம் முழுவதும் முஸ்லிம்கள் மீதுத் தாக்குதல்களைக் கட்டவிழ்த்து விடப் பச்சைக் கொடி காட்டினார்கள்.

தாக்குதல் நடத்துபவர்களைக் கலவரத்திற்குப் பின் சட்டத்திலிருந்து எப்படிப் பாதுகாப்பது என்கிற தந்திர சூழ்ச்சிகள் திட்டமிடப்பட்டது. இது பற்றியத் தகவல்கள் பிரபல்யமான வக்கீல்களுக்கு முன்னறிவிப்பு செய்யப்பட்டு, உயர் போலீஸ் அதிகாரிகளின் உத்திரவாதமும் பெறப்பட்டது. மோடி நேரடியாக பக்கபலமாக இருப்பதாக தொண்டர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது.


குஜராத் மேல்ஜாதி மக்களிடம் ஆழமாக ஊடுருவியுள்ள ஹிந்துத்வாக் கொள்கையில் தாழ்த்தப்பட்ட இனமக்களையும் முழுமையாக இணைத்துக் கொண்டுச் செல்ல, சங்க்பரிவாரம் சில ஆண்டுகளாகவே செயல்பட்டு வருகிறது. அவர்களிடையே இவ்விணைப்பைப் பற்ற வைக்கும் மிக அவசியமான நெருப்புப் பொறியை கோத்ரா சம்பவம் அளித்தது.

ஆரம்பத்திலிருந்தே, காவல் துறையினரும் காவி கட்சியினர் போல வன்முறைக் கும்பலுடன் மிக அதிகமான சந்தர்பங்களில் ஒன்றிணைந்தே செயல்பட்டனர். எந்த அதிகாரிகள் தங்கள் கடமையைச் செய்ய முயன்றனரோ அவர்களதுக் கைகள் கட்டப்பட்டன. அஹமதாபாத் மாநகர முன்னால் காவல் ஆணையர் பி.சி. பாண்டே என்பவர் வன்முறை கும்பலுடன் காவல்துறையினர் கைகோர்த்துச் செயல்படுவதை முன்னின்று நடத்தியதோடு, இளம் அதிகாரிகள் தனது செயல்பாடுகளுக்கு முழுமையாக இணங்கிக் கட்டுண்டு நடப்பதையும் உறுதிப்படுத்தினார்.

சங்க்பாரிவாரங்கள் தாங்களே, குண்டுகள் முதல் துப்பாக்கிகள், சூலாயுதங்கள் வரை அனைத்து ஆயுதங்களையும் தயாரித்து வினி்யோகம் செய்தோ அல்லது சங்பரிவார் தொடர்புகள் மூலமாக இந்தியாவின்

பல்வேறு பகுதிகளிலிருந்தும் கடத்தியோ கொண்டுவந்தார்கள்.

ஏராளமான துப்பாக்கிகள் மற்றும் குறுவாள்களை, பஜ்ரங்தள் மற்றும் விஹெச்பியினர் ஏற்கனவே பதுக்கி வைத்திருந்தனர்.

அஹமதாபாத்தின் சந்துகளிலும், சபர்கந்தாவின் கிராமங்களிலும், வதோதராவின் சுற்றுவட்டாரங்களிலும் இரத்த வெறிப்பிடித்த வன்முறை கும்பல்களை பிஜேபி மற்றும் சங்க்பரிவார் தலைவர்களே வழிநடத்திச் சென்றனர். ஆங்காங்கே நடைபெற்ற வன்முறைகளுக்கு காலல்துறையே பாதுகாப்பாக நின்றது.

பிஜேபி சட்டமன்ற உறுப்பினர் மாயாபென் கொட்னானி, அஹமதாபாத்திலுள்ள நரோடா சுற்றுவட்டாரங்களில் நாள் முழுவதும் வண்டியில் சுற்றிக் கொண்டே வன்முறை கும்பல்களை இயக்கிக் கொண்டிருந்தார். இதே செயலையே குல்பர்க் பகுதியில், விஹெச்பி தலைவர்களான அதுல் வைத் மற்றும் பாரத் தெலி செய்துக் கொண்டிருந்தனர். இவர்களில் எவருமே சிறைச்சாலையில் ஒரு போதும் அடைக்கபடவில்லை.

'தீ'யே கலவரக்காரர்களின் கைகளில் மிக விருப்பமான ஆயுதமாக இருந்தது. இறந்தவர்களைத் தீயில் தகனம் செய்வது இஸ்லாத்தில் இல்லை என்பதே, எரிக்க வேண்டும் என்ற இவர்களுடைய வெறிக்கு உந்துதலாக இருந்தது. பெட்ரோல் மற்றும் மண்ணெண்ணைத் தாராளமாகப் பயன்படுத்தபட்டதோடு, பாதிக்கபட்டவர்களிடம் இருந்த வாயு உருளைகளும் கூட எரிப்பதற்குப் பயன்படுத்தபட்டன.

நரோடா பாட்டியாவிலுள்ள ஹிந்துக்களிடமிருந்து 23 கைத்துப்பாக்கிகளைப் பெற்றதாக பாபு பஜ்ரங்கி தெரிவித்தான். இவன் உயிர் இழப்பு குறித்த எண்ணிக்கைகளை, விஹெச்பியின் பொதுச் செயலாளர் ஜெய்தீப் படேலை 11 முறை அழைத்துச் சொன்னதோடு, முன்னாள் உள்துறை இணை அமைச்சர் கோர்தன் ஜதாபியாவிற்கும் தகவல் சொன்னான்.

நானாவதி கமிஷன் முன்பு அரசின் சட்ட ஆலோசகராகச் சென்ற அரவிந்த் பாண்ட்யாவே மோடியை பூஜிப்பவராக இருப்பதோடு, நீதிபதி ஷாவை 'தங்களுடைய ஆள்' என்பதாகவும் கூறினார். 1984ல் சீக்கிய எதிர்ப்புக் கலவரம் குறித்த நானாவதியுடைய சுய கூற்றே இன்றுவரை தூசிபடிந்துப் போயுள்ளது.

 

நன்றி பதிவர்: இறை நேசன் http://copymannan.blogspot.com/