இன்பந் தருந்தமிழில் அன்பு பிறந்ததுண்டு;
துன்பம் இனியு முண்டோ
சொல் சொல் சொல் பகையே!
முன்பு துருப்பிடித்தி ருந்த படைக்கலமாம்
முத்தமிழ் ஒளி அறிந்து
செல் செல் செல் பகையே!
இன்பந் தருந்தமிழில்...

தெள்ளு தமிழில்இசைத் தேனைப் பிழிந்தெடுத்துத்
தின்னும் தமிழ் மறவர்
யாம் யாம் யாம் பகையே!
துள்ளும் பகைமுடித்துக் கூத்திடுவோம் தமிழர்
கொள்கை நிறைவ டைந்து
போம் போம் போம் பகையே!
இன்பந் தருந்தமிழில்...

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp093b.htm#dt140