பாழாப்போன என்மனம் ஒரு நாய்க்குட்டி - அதைப்
பறித்துக் கொண்டாய் அடியே என் சின்னக்குட்டி
உன் மேனி ஒரு பூத்தொட்டி
உதடு தித்திக்கும் வெல்லக்கட்டி
ஏழைக்கு வடித்து வைத்த சோறு - பணம்
இருப்ப வர்க்குச் சாத்துக்குடிச் சாறு
பெருக் கெடுத்த தேனாறு
பெண்ணே உன் எண்ணம் கூறு
காணக்காண ஆசை காட்டும் முத்துநிலா -நீ
கடுகடுப்ப விலக்கிவிட்டால் பழி உன்னைச் சேருமே
பொறுத்தோன் ஒரு வாரமே
பொறுக்க மாட்டார் யாருமே.

 

http://www.geocities.com/Athens/5180/bdasan.html