உலகில் உள்ள மொத்த பறவைகளில் ஐந்தில் ஒரு பகுதி அழியும் அபாயத்தில் இருப்பதாக போர்டு லைப் இன்டர் நேஷனல் என்ற அமைப்பு கூறியுள்ளது.

 

உலகில் மொத்தம் ஒன்பதாயிரத்து எழுநூற்று எழுபத்தைந்து பறவை இனங்கள் உள்ளன. அவற்றில் மூவாயிரத்து இருநூற்று பன்னிரண்டு பறவை இனங்கள் அழியும் ஆபத்தில் இருக்கின்றன. நூற்று எழுபத்தொன்பது பறவை இனங்கள் மிகப் பெரிய ஆபத்தில் இருக்கின்றன. பறவைகள் வசிக்கும் காடுகளை மனிதன் அழித்து வருவதால் பறவை இனங்கள் அழியும் ஆபத்தில் உள்ளன.