அரிசி : 1 கப்
பாசிப் பருப்பு: காலே அரைக்கால் கப்( 1/3 கப்ன்னு ஒரு அளவுக்கிண்ணம் கிடைக்குது!)


நெய்: 1/3 கப்

உப்பு: ஒரு தேக்கரண்டி

மிளகு: ஒரு தேக்கரண்டி

சீரகம்: ஒரு தேக்கரண்டி

பெருங்காயத்தூள்: ரெண்டு சிட்டிகை

இஞ்சி: துருவியது : ஒரு தேக்கரண்டி

கருவேப்பிலை: ஒரு இணுக்கு

முந்திரிப்பருப்பு: 20

வெறும் வாணலியில் பாசிப்பருப்பை மணம் வர வறுத்துக்கணும். அரிசி பருப்பைச் சேர்த்துக் கழுவிக்களைந்து(3) நாலரைக் கப் தண்ணீர் சேர்த்து அதே குக்கர் & அதே 3 விஸில். ஆச்சா?

பெரிய வாணலியில் நெய் சேர்த்து முந்திரியைப் பொன்நிறமாக வறுத்து எடுத்துத் தனியே வச்சுக்கணும். இன்னும் கொஞ்சம் நெய் சேர்த்து மிளகு & சீரகம் பொரிச்சுட்டு அதிலேயே பெருங்காயம், இஞ்சி & கருவேப்பிலை, உப்பு சேர்த்து நல்லா மணம்வரும்வரை வதக்கிட்டு, குக்கரில் வெந்ததைப் போட்டுக் கிளறணும். அப்பப்ப நெய். ஒரு மூணு, நாலு நிமிஷம் கிளறிட்டுக் கடைசியில் வறுத்த முந்திரியைச் சேர்த்து ஒரு கிளறல்.
அவ்வளவுதான். பாத்திரத்தில் எடுத்து வச்சால் ஆச்சு.